states

img

உ.பியில் மின்வெட்டால் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை

உத்தரபிரதேசத்தில் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் நேற்று கன மழை பெய்தது. இதை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. அப்போது மாவட்ட அரசு மருத்துவமனையில் பெண் ஒருவர் ஸ்ரெச்சரில் இருந்த நிலையில் ஜெனரேட்டரை உபயோகிக்காமல் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்துள்ளனர். இது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து உத்தரபிரதேச காவல்துறையினர் எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை 

;